சவுல் மரித்த காரணம் [Tamil Christian Story]

சவுல் மரித்த காரணம் இஸ்ரவேலின் முதல் இராஜா என்னும் பெருமையை பெற்ற சவுல், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட சவுல், சவுந்தரியமான வாலிபனாகிய சவுல், இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை; எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான் என்று சொல்லத்தக்கதான சவுல், தேவ வார்த்தைகளின்படி செய்தததினிமித்தம் மரித்து போனான். ‘அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்யபாரத்தை ஈசாயின் குமாரனாகிய தாவீது வசமாகத் திருப்பினார்’ (1 நாளாகமம் 10:14) என்று வேதத்தில் பார்க்கிறோம். எத்தனை ஒரு பயங்கரமான […]

பாவ அறிக்கை [Tamil Christian Story]

பாவ அறிக்கை 1983-ம் ஆண்டு, கார்லா டக்கர் (Karla Tucker) என்னும் பெண், இரண்டு பேரை கொடூரமாக கொலை செய்தாள். அதினால் அவள் சிறையிலிருந்தபோது, கிறிஸ்துவை குறித்து கேள்விபட்டு, தன் பாவங்களை அறிக்கையிட்டு, அவரை தன் சொந்த இரட்சகராக ஏற்று கொண்டாள். அதன் பின் அவள் வாழ்க்கை மாறியது. மற்றவர்களுக்கு உதவுபவளாக, தன் நடத்தையில் நன்கு முன்னேறியதால், அவளை தூக்குதண்டனையிலிருந்து, ஆயுட்கால சிறைக்கு மாற்றுவார்கள் என அவளோடு இருந்த அநேகர் நினைத்தனர். ஆனால், அவள் அனுப்பிய மனுக்கள் […]

ஜீவாதாரபலியாகிய இயேசு கிறிஸ்து [Tamil Christian Story]

ஜீவாதாரபலியாகிய இயேசு கிறிஸ்து ஐரோப்பாவின் வடக்கில் உள்ள நாடுகளில் காடுகள் ஏராளம். அங்குள்ள ஒரு காட்டிற்கு சென்று, இன்பமாக நாளை கழிக்கலாமென்று ஒரு நண்பர் கூட்டம் எண்ணியது. அவர்கள் சுமார் பதினைந்து பேர் இருப்பார்கள். இரண்டு மூன்று வீட்டினர் ஒன்றாக வந்திருந்தனர். சமைத்த பண்டங்களை சாப்பிட்டபின் பேசி கொண்டிருக்கையில் தொலைவில் கண்ட ஒரு காட்சி அவர்களை அப்படியே தூக்கி வாரிப்போட்டது. என்னது புகை? நெருப்பு? அக்காட்டில் ஒரு பகுதியில் மூங்கில் போன்ற மரங்கள் ஒன்றோடொன்று மோதி உராய்ந்ததன் […]

பெருமையின் பலன் [Tamil Christian Story]

பெருமையின் பலன் தனது 26 ஆவது வயதில் நெப்போலியன் போனபார்ட் (Nepolean Bonaparte) இத்தாலியிலுள்ள பிரஞ்ச் இராணுவத்தின் தளபதியானார். 1804ல் அவர் 35 வயதாவதற்குள், பிரஞ்ச் நாட்டின் அரசனானார். பிரஞ்ச் அதிபர்களுக்கும், கத்தோலிக்க போப்களுக்கும் இடையில், கசப்பான உறவுமுறை இருந்த போதிலும், பிரான்ஸின் அரசாங்க மதமாக கத்தோலிக்க மதமே இருந்து வந்தது. பிரான்ஸ் நாட்டின் முதல் மன்னனாக நெப்போலியன் முடிசூட்டி கொள்வதற்காக போப்பையும் அழைத்திருந்தான். முடிசூட்டும் விழா Notre Dam என்னும் இடத்திலுள்ள பெரிய கதீட்ரலில் (Cathedral) […]

இளைப்பாறுதல் தரும் சிலுவையின் நிழல் [Tamil Christian Story]

இளைப்பாறுதல் தரும் சிலுவையின் நிழல் வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் ஒரு முட்செடியின் கொஞ்ச நிழலில் ஒரு கருநாகம் தனது வாலின் துணையுடன் தன் வயிறு வெப்பத்தினால் பாதிக்காதபடி நின்று கொண்டிருந்தது. அதன் நிழல் சற்று கீழே விழுந்தது. அந்த நேரம் நிழலுக்காக தவித்து, திரிந்த தவளை அந்த நிழலை கண்டு சந்தோஷமாக ஓடி வந்தது. ஓரக்கண்ணால் தவளையை பார்த்த கருநாகம் அதை என்ன செய்திருக்கும்? அது நம் அனைவருக்கும் தெரிந்ததே! வேதத்திலே உவமைகள் மூலமாக தேவன் […]

முழங்காலின் ஜெபம் [Tamil Christian Story]

முழங்காலின் ஜெபம்  ஒரு மிஷனெரி நிறுவனமானது மிஷனெரி ஒருவரை குறிப்பிட்ட பட்டணத்திற்கு ஊழியம் செய்ய அனுப்பியது. உற்சாகமாக சென்ற அவர் அப்பட்டணத்தை சுற்றி பார்த்தார். ஓரிரு நாட்களில் ஊழியத்தை ஆரம்பித்தார். மாதங்கள் பல உருண்டோடின. எவரும் இவரது போதனைக்கு செவிசாய்க்கவில்லை. மக்கள் மிகவும் முரட்டாட்டம் மிக்கவர்களாய் மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தனர். தினமும் இடைவிடாமல் ஊழியம் செய்தும் ஒரு சிலரை கூட மாற்ற முடியவில்லை. எனவே மிகவும் சோர்வுற்றவராக எனது எல்லா முயற்சியும் பயனற்று போய் […]

இயேசு நம்மோடு என்றும் [Tamil Christian Story]

இயேசு நம்மோடு என்றும் பட்டணத்தில் வசிக்கும் பெண் ஒருத்தி தன் போதகரிடம் வந்து, நான் எப்படி ஆடையணிய வேண்டும் என்று கேட்டாள். அதற்கு அவர் ‘உன் சுடிதார் இவ்வளவு நீளம் இருக்க வேண்டும், உன் சட்டையின் கழுத்து இவ்வளவு குறைவாக இருக்க வேண்டுமென்று சொல்ல நான் ஒரு டெய்லர் இல்லை, நான் ஒரு ஊழியன். ஆகவே நீ எப்படி ஆடையணிய வேண்டுமென்று கூறுகிறேன் என்றால், உன் வீட்டிற்கு அடுத்த தெருவில் இயேசு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என வைத்து […]

கோதுமை மணி [Tamil Christian Story]

கோதுமை மணி போதகர் பால் யாங்கி சோ அவர்கள் கீழ்கண்ட சம்பவத்தை கூறினார்கள். கொரியாவில் நடந்த போரில் 500 கிறிஸ்தவ போதகர்களை பிடித்து, உடனே அவர்களை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்கள். 2000 தேவாலயங்கள் சூறையாடப்படடு எரிக்கப்பட்டது. மற்றும் கொரியாவில் Inchon என்னுமிடத்தில் கம்யூனிச தலைவர்கள் ஒரு போதகரை அவரையும் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை குடும்பத்தோடு பிடித்து, அவர்களை ஒரு பெரிய குழியில் வைத்து, அந்த போதகரிடம், ‘இத்தனை வருடங்கள் நீர் இந்த மக்களை வேதாகமம் […]

பக்தி வைராக்கியம் [Tamil Christian Story]

பக்தி வைராக்கியம் பில்லிகிரஹாம் பொது கூட்டமொன்றில் கடிதம் ஒன்றை வாசித்தார். அது அமெரிக்க நாட்டு கல்லூரி மாணவன் ஒருவனால் எழுதப்பட்டிருந்தது. அவன் மெக்ஸிகோவிலிருந்த போது ஒரு கம்யூனிஸ்டாக மாறி விட்டான். அதினால் தான் விரும்பிய பெண்ணின் உறவை முறிக்க அவன் எழுதிய கடிதம் அது. கடித்தத்தில் அவன் எழுதியிருந்தது: ‘கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்குள் மரண விபத்துகள் அதிகம். எங்கள் நடுவில் சுட்டு கொல்லப்படுகிறவர்களும், தூக்கிலிடப்படுபவர்களும், உயிரோடு வைத்து கொல்ல்பபடுகிறவர்களும், சிறையில் அடைக்கப்படுகிறவர்களும் ஏராளம், ஏராளம். நாங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு […]

அவர் நேரத்தில் [Tamil Christian Story]

அவர் நேரத்தில் ராபர்ட் மேத்தியூ என்பவர், தனது மனைவி கர்ப்பிணியாய் இருப்பதை சில வாரங்களுக்கு முன்தான் குடும்பமாய் அறிந்திருந்தனர். அவர்கள் விர்ஜினியா என்னும் அமெரிக்க நகரத்தில் வசித்து வந்தார்கள். மனைவி கலிபோர்னியாவில் உள்ள தன் சகோதரியை பார்க்க வேண்டும் என்று ஆவலாய் இருந்தபடியால், அதற்கென்று திட்டமிட்டு அவர்கள் அடுத்த நாள் தயாரானார்கள். அன்று செப்டம்பர் மாதம் 10ம் தேதி. அவர்கள் தயாராகி, காரில் போய் கொண்டிருந்தபோது, இருவரும் ஜெபித்தார்கள். தன் மனைவியின் இந்த கலிபோர்னியா போய் வரும் […]