
Quiz | Tamil Bible Quiz |
Chapter | ஆதியாகமம் [Genesis] |
Number of Questions | 204 |
Check All Tamil Bible Quiz Here
ஆதியாகமம் வேத வினா விடை கேள்விகள்
கேள்வி-1 : ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் ______ .
• ஆசிர்வதித்தார்
• படைத்தார்
• உண்டாக்கினார்
• சிருஷ்டித்தார்
பதில் : சிருஷ்டித்தார் |
கேள்வி-2 : ஆதியிலே இருள் எங்கிருந்தது?
• வானத்தில்
• பூமியில்
• காட்டில்
• ஆழத்தில்
பதில் : ஆழத்தில் |
கேள்வி-3 : ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது எது?
• வானம்
• பூமி
• ஆகாயவிரிவு
• சமுத்திரம்
பதில் : பூமி |
கேள்வி-4 : முதலாம் நாளில் படைக்கப்பட்டது எது?
• வெளிச்சம்
• காய்கறி
• தண்ணீர்
• பழங்கள்
பதில் : வெளிச்சம் |
கேள்வி-5 : ஆகாய விரிவுக்கு என்ன பெயர் வைக்கப்பட்டது?
• பூமி
• கடல்
• நிலம்
• வானம்
பதில் : வானம் |
கேள்வி-6 : தேவன் தம்முடைய கிரியைகளை எந்த நாளில் நிறைவேற்றினார்?
• இரண்டாம் நாளில்
• ஐந்தாம் நாளில்
• ஏழாம் நாளில்
• ஒன்பதாம் நாளில்
பதில் : ஏழாம் நாளில் |
கேள்வி-7 : தேவ ஆவியானவர் எதின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்?
• வானம்
• நிலம்
• காற்று
• ஜலம்
பதில் : ஜலம் |
கேள்வி-8 : ஜலத்தினின்று ஜலத்தை பிரித்தது எது?
• பூமி
• ஆகாயவிரிவு
• சமுத்திரம்
• தண்ணீர்
பதில் : ஆகாயவிரிவு |
கேள்வி-9 : காலங்களையும், நாட்களையும், வருஷங்களையும் குறிக்க உண்டாக்கப்பட்டது?
• சுடர்கள்
• நட்சத்திரங்கள்
• கோள்கள்
• பூமி
பதில் : சுடர்கள் |
கேள்வி-10 : தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார். அது ________ .
• அழகாயிருந்தது
• மிகவும் அழகாயிருந்தது
• நன்றாயிருந்தது
• மிகவும் நன்றாயிருந்தது
பதில் : மிகவும் நன்றாயிருந்தது |
கேள்வி-11 : தேவனாகிய கர்த்தர் மனுஷனை எதினாலே உண்டாக்கினார்?
• மண்
• வார்த்தை
• களிமண்
• எழும்பு
பதில் : மண் |
கேள்வி-12 : ஏதேன் தோட்டம் இருந்த திசை எது?
• தெற்கு
• கிழக்கு
• மேற்கு
• வடக்கு
பதில் : கிழக்கு |
கேள்வி-13 : ஏதேனிலிருந்து எத்தனை ஆறுகள் பிரிந்தது?
• இரண்டு
• மூன்று
• நான்கு
• ஐந்து
பதில் : நான்கு |
கேள்வி-14 : பொன் விளையும் தேசம் எது?
• எத்தியோப்பியா
• ஆவிலா
• ஆசியா
• கீகோன்
பதில் : ஆவிலா |
கேள்வி-15 : ஆசியாவுக்கு கிழக்கே ஓடும் ஆற்றின் பெயர்?
• கீகோன்
• இதெக்கேல்
• பைசோன்
• ஐபிராத்து
பதில் : இதெக்கேல் |
கேள்வி-16 : தேவன் ஆதாமிடம் எந்த கனியை புசிக்க வேண்டாம் என்றார்?
• நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்
• ஜீவ விருட்சம்
• அழகான விருட்சம்
• புளிப்பு விருட்சம்
பதில் : நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் |
கேள்வி-17 : எந்த எழுப்பினால் தேவன் மனுஷியை உண்டாக்கினார்?
• நல்ல எலும்பு
• தாடை எழும்பு
• விலா எலும்பு
• முதுகு எலும்பு
பதில் : விலா எலும்பு |
கேள்வி-18 : தந்திரமுள்ள சர்ப்பம் யாரிடம் வந்து பேசியது?
• ஆபிரகாம்
• ஆதாம்
• ஏவாள்
• மோசே
பதில் : ஏவாள் |
கேள்வி-19 : தேவனாகிய கர்த்தர் தோட்டத்தில் உலாவுகிற நேரம்?
• சாயங்காலம்
• இரவு
• பகல்
• காலை
பதில் : பகல் |
கேள்வி-20 : சகல நாட்டு மிருகங்களிலும், காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டது எது?
• சர்ப்பம்
• தேள்
• பன்றி
• கழுகு
பதில் : சர்ப்பம் |
கேள்வி-21 : நீ உன் வயிற்றினால் நகர்ந்து உயிரோடிருக்கும் நாளெல்லாம் __________ தின்பாய்.
• வெண்ணை
• புல்லை
• மண்ணை
• கல்லை
பதில் : மண்ணை |
கேள்வி-22 : ஆதாம், ஏவாளுக்கு தேவன் உடுத்திய உடை எது?
• சணல் உடை
• இலை உடை
• பருத்தி உடை
• தோல் உடை
பதில் : தோல் உடை |
கேள்வி-23 : ஏவாள் பெற்ற முதல் குமாரன் பெயர்?
• ஆபேல்
• சேத்
• லாமேக்கு
• காயீன்
பதில் : காயீன் |
கேள்வி-24 : வேதாகமத்தில் முதல் கொலைகாரன் யார்?
• சேத்
• காயீன்
• ஆபேல்
• லாமேக்கு
பதில் : காயீன் |
கேள்வி-25 : காயீனை கொல்லுகிற எவன் மேலும் ________ பழி சுமரும்.
• ஏழு
• எழுபது
• எழுபத்தேழு
• எழுநூறு
பதில் : ஏழு |
கேள்வி-26 : காயீன் குடியிருந்த தேசம் எது?
• எகிப்து
• நோத்
• ஆவிலா
• எத்தியோப்பியா
பதில் : நோத் |
கேள்வி-27 : காயீனின் மகன் பெயர் என்ன?
• ஈராத்
• சேத்
• ஏனோக்கு
• மெகுயவேல்
பதில் : ஏனோக்கு |
கேள்வி-28 : வேதாகமத்தில் முதல் முதலில் ஒரு பட்டணத்தை கட்டியவன்?
• ஆபேல்
• காயீன்
• லாமேக்கு
• ஏனோக்கு
பதில் : காயீன் |
கேள்வி-29 : ஆதாள், சில்லாள் என்ற இரண்டு ஸ்திரியை விவாகம் பண்ணியது?
• யாபால்
• மெகுயவேல்
• யூபால்
• லாமேக்கு
பதில் : லாமேக்கு |
கேள்வி-30 : கூடாரங்களில் வாசம் பண்ணுகிறவர்களுக்கும், மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பன்?
• யாபால்
• மெகுயவேல்
• யூபால்
• தூபால் காயீன்
பதில் : யாபால் |
கேள்வி-31 : ஆதாம், ஏவாளுக்கு ஆபேலுக்கு பதிலாக தேவன் கொடுத்த புத்திரன்?
• யாபால்
• சேத்
• லாமேக்கு
• ஈராத்
பதில் : சேத் |
கேள்வி-32 : சேத் பிறந்த போது ஆதாமின் வயது என்ன?
• நூற்று பத்து
• நூற்று இருபது
• நூற்று முப்பது
• நூற்று நாற்பது
பதில் : நூற்று முப்பது |
கேள்வி-33 : ஆதாம் உயிரோடிருந்த நாட்கள் எத்தனை வருஷம்?
• 630
• 730
• 830
• 930
பதில் : 930 |
கேள்வி-34 : வேதாகமத்தில் அதிக வருடம் உயிர் வாழ்ந்த நபர்?
• மகலாலெயேல்
• ஏனோக்கு
• மெத்துசலா
• லாமேக்கு
பதில் : மெத்துசலா |
கேள்வி-35 : தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருக்கையில் காணாமல் போனது யார்?
• யாரேத்
• ஏனோக்கு
• லாமேக்கு
• மகலாலெயேல்
பதில் : ஏனோக்கு |
கேள்வி-36 : நோவாவின் தாத்தா பெயர் என்ன?
• யாப்பேத்
• மெத்துசலா
• லாமேக்கு
• மகலாலெயேல்
பதில் : மெத்துசலா |
கேள்வி-37 : மனுஷன் உயிர் வாழும் நாட்கள் எத்தனை வருஷம் என்று கர்த்தர் சொல்லுகிறார்?
• அறுபது
• தொண்ணூறு
• நூற்று இருபது
• நூற்று நாற்பது
பதில் : நூற்று இருபது |
கேள்வி-38 : மனுஷ குமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டது?
• தேவ குமாரர்
• தேவ தூதர்
• இராட்சதர்
• சாத்தான்
பதில் : தேவ குமாரர் |
கேள்வி-39 : பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக கர்த்தர் ________ .
• விசனப்பட்டார்
• சந்தோஷப்பட்டார்
• மனஸ்தாபப்பட்டார்
• மகிழ்ச்சியடைந்தார்
பதில் : மனஸ்தாபப்பட்டார் |
கேள்வி-40 : யாருக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது?
• நோவா
• ஏனோக்கு
• மெத்துசலா
• லாமேக்கு
பதில் : நோவா |
கேள்வி-41 : நோவா எந்த மரத்தில் பேழையை உண்டாக்கினான்?
• ஒலிவ மரம்
• ஆப்பிள் மரம்
• கொப்பேர் மரம்
• கேதுரு மரம்
பதில் : கொப்பேர் மரம் |
கேள்வி-42 : நோவாவோடு பேழையில் இருந்தது எத்தனை பேர்?
• இரண்டு
• ஐந்து
• எட்டு
• பத்து
பதில் : எட்டு |
கேள்வி-43 : எந்த பறவை பேழைக்கு வருகிறதும் போகிறதுமாக இருந்தது?
• காகம்
• மைனா
• புறா
• குயில்
பதில் : காகம் |
கேள்வி-44 : நோவா எத்தனை முறை புறாவை வெளியே விட்டான்?
• ஒன்று
• இரண்டு
• மூன்று
• நான்கு
பதில் : மூன்று |
கேள்வி-45 : புறா எந்த மரத்தின் இலையை கொத்திக் கொண்டு வந்தது?
• கொப்பேர் மரம்
• ஒலிவ மரம்
• கேதுரு மரம்
• கர்வாலி மரம்
பதில் : ஒலிவ மரம் |
கேள்வி-46 : மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கி __________ இருக்கிறது.
• பாவமுள்ளதாய்
• வெறுமையாய்
• பொல்லாததாய்
• இன்பமாய்
பதில் : பொல்லாததாய் |
கேள்வி-47 : வேதாகமத்தில் தகனபலியிட்ட முதல் மனிதன் யார்?
• ஆதாம்
• நோவா
• ஆபிரகாம்
• மோசே
பதில் : நோவா |
கேள்வி-48 : மாம்சத்தின் உயிர் எதில் உள்ளது?
• இருதயம்
• மூளை
• இரத்தம்
• ஆவி
பதில் : இரத்தம் |
கேள்வி-49 : தேவனுக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கையின் அடையாளம் எது?
• காற்று
• வில்
• மேகம்
• மழை
பதில் : வில் |
கேள்வி-50 : கானானுக்கு தகப்பன் யார்?
• சேம்
• நோவா
• காம்
• யாபேத்
பதில் : காம் |
கேள்வி-51 : நோவா யாரை பார்த்து சபிக்கப்பட்டவன் என்றான்?
• சேம்
• யாப்பேத்
• கானான்
• கூஷ்
பதில் : கானான் |
கேள்வி-52 : நோவா எத்தனை வருஷம் உயிரோடிருந்தான்?
• 350
• 550
• 750
• 950
பதில் : 950 |
கேள்வி-53 : யாருடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது?
• அசூர்
• ஏபேர்
• பேலேகு
• நிம்ரோத்
பதில் : பேலேகு |
கேள்வி-54 : பாபேல் கோபுரத்தை கட்ட கல்லுக்கு பதிலாக பயன்படுத்தப்பட்டது?
• நிலக்கீல்
• சாந்து
• செங்கல்
• தங்கம்
பதில் : செங்கல் |
கேள்வி-55 : ஆபிராமின் தகப்பன் பெயர் என்ன?
• தேராகு
• ஆரான்
• நாகோர்
• லோத்
பதில் : தேராகு |
கேள்வி-56 : ஊர் என்கிற பட்டணம் எந்த தேசத்தில் உள்ளது?
• நோத்
• சிநெயார்
• கல்தேயர்
• கானான்
பதில் : கல்தேயர் |
கேள்வி-57 : நாகோரின் மனைவி பெயர் என்ன?
• சாராய்
• மில்க்காள்
• இஸ்காள்
• ரெபேக்காள்
பதில் : மில்க்காள் |
கேள்வி-58 : தேராகின் ஆயுசு நாட்கள் எத்தனை வருஷம்?
• நூற்று ஐந்து
• நூற்று எழுபத்தைந்து
• இருநூற்று ஐந்து
• இருநூற்று எழுபத்தைந்து
பதில் : இருநூற்று ஐந்து |
கேள்வி-59 : உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன் என்று கர்த்தர் யாரிடம் சொன்னார்?
• ஆபிராம்
• ஈசாக்கு
• யாக்கோபு
• யோசேப்பு
பதில் : ஆபிராம் |
கேள்வி-60 : ஆபிராமின் சகோதரன் குமாரன் பெயர் என்ன?
• செரூக்
• ரெகூ
• நாகோர்
• லோத்து
பதில் : லோத்து |
கேள்வி-61 : ஆபிராம் ஆரானிலிருந்து எங்கு போனான்?
• மோரே
• கானான்
• எகிப்து
• பெத்தேல்
பதில் : கானான் |
கேள்வி-62 : எகிப்தியர் முன்பாக ஆபிராம் சாராயை எப்படி சொல்வதாக சொன்னான்?
• மனைவி
• மகள்
• சகோதரி
• தோழி
பதில் : சகோதரி |
கேள்வி-63 : யார் நிமித்தம் கர்த்தர் பார்வோனின் வீட்டை மகா வாதைகளால் வாதித்தார்?
• ஆபிராம்
• லோத்து
• சாராய்
• ஈசாக்கு
பதில் : சாராய் |
கேள்வி-64 : யார் யாருடைய மந்தை மேய்ப்பருக்கு வாக்குவாதம் உண்டாயிற்று?
• பார்வோன், ஆபிராம்
• ஆபிராம், லோத்து
• லோத்து, மம்ரே
• மம்ரே, ஆபிராம்
பதில் : ஆபிராம், லோத்து |
கேள்வி-65 : லோத்து எந்த திசையை தெரிந்து கொண்டான்?
• வடக்கு
• மேற்கு
• கிழக்கு
• தெற்கு
பதில் : கிழக்கு |
கேள்வி-66 : பொல்லாதவர்களும், கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாயிருந்தது யார்?
• எகிப்தியர்கள்
• சோதோமின் ஜனங்கள்
• பெரிசியர்கள்
• பார்வோன் ஜனங்கள்
பதில் : சோதோமின் ஜனங்கள |
கேள்வி-67 : கர்த்தர் ஆபிரகாமிடம் உன் சாந்ததியை பூமியின் __________ பெருகப் பண்ணுவேன் என்றார்.
• மண்ணைப்போல
• கல்லைப்போல
• தூளைப்போல
• கடலைப்போல
பதில் : தூளைப்போல |
கேள்வி-68 : ஆபிராமோடு உடன்படிக்கை செய்து கொண்ட எமோரியன் யார்?
• ஆநேர்
• எஸ்கோல்
• மம்ரே
• மெத்துசலா
பதில் : மம்ரே |
கேள்வி-69 : ஆபிராம் லோத்தை காப்பாற்ற எத்தனை ஆட்களுடன் சென்றான்?
• 308
• 318
• 350
• 378
பதில் : 318 |
கேள்வி-70 : எந்த பள்ளத்தாக்கை ராஜாவின் பள்ளத்தாக்கு என்று அழைத்தனர்?
• கேராசின்
• சாவே
• சித்தீம்
• பேரா
பதில் : சாவே |
கேள்வி-71 : ஆபிராமுக்கு அப்பமும் திராட்சை ரசமும் கொண்டு வந்தது யார்?
• மெத்துசலா
• ஏனோக்கு
• மெல்கிசேதேக்
• சிநெயா
பதில் : மெல்கிசேதேக் |
கேள்வி-72 : வேதத்தில் தசமபாகம் கொடுத்த முதல் மனிதன் யார்?
• ஆதாம்
• ஆபிராம்
• ஈசாக்கு
• யாக்கோபு
பதில் : ஆபிராம் |
கேள்வி-73 : கர்த்தர் ஆபிராமிடம்: நான் உனக்கு ______ , உனக்கு மகா பெரிய பெலனுமாயிருக்கிறேன் என்றார்?
• கேடகமும்
• அடைக்கலமும்
• கன்மலையும்
• கோட்டையும்
பதில் : கேடகமும் |
கேள்வி-74 : ஆபிராமின் வீட்டு விசாரணைக்கர்த்தன் யார்?
• லோத்து
• மம்ரே
• எலியேசர்
• ஏனோக்கு
பதில் : எலியேசர் |
கேள்வி-75 : கர்த்தர் ஆபிராமுக்கு வானத்தில் எதை காண்பித்தார்?
• வானவில்
• சூரியன்
• நட்சத்திரம்
• சந்திரன்
பதில் : நட்சத்திரம் |
கேள்வி-76 : ஆபிராம் கர்த்தரை விசுவாசித்தான். அதை அவர் அவனுக்கு _______ எண்ணினார்
• நீதியாக
• கேடகமாக
• உண்மையாக
• கிரீடமாக
பதில் : நீதியாக |
கேள்வி-77 : ஆபிராமின் சந்ததியை எத்தனை வருஷம் உபத்திரவப் படுத்துவார்கள் என்று கர்த்தர் சொன்னார்?
• இருநூறு
• முன்னூறு
• நானூறு
• ஐநூறு
பதில் : நானூறு |
கேள்வி-78 : சாராயின் அடிமை பெண் பெயர் என்ன?
• ஆகார்
• மில்க்காள்
• இஸ்காள்
• நாமாள்
பதில் : ஆகார் |
கேள்வி-79 : ஆபிராம் கானான் தேசத்தில் எத்தனை வருஷம் குடியிருந்த பின்பு ஆகாரை மறுமனையாட்டியாக்கினான்?
• பத்து
• பதினைந்து
• இருபது
• இருபத்தி ஐந்து
பதில் : பத்து |
கேள்வி-80 : துஷ்ட மனுஷன் யார்?
• ஆபிராம்
• ஈசாக்கு
• இஸ்மவேல்
• லோத்து
பதில் : இஸ்மவேல் |
கேள்வி-81 : கர்த்தருக்கு நீர் என்னை காண்கிற தேவன் என்று பேரிட்டது யார்?
• ஆபிராம்
• சாராய்
• ஆகார்
• இஸ்மவேல்
பதில் : ஆகார் |
கேள்வி-82 : இஸ்மவேல் பிறந்த போது ஆபிராமின் வயது என்ன?
• எண்பத்து ஆறு
• தொண்ணுறு
• தொண்ணூற்று ஆறு
• நூறு
பதில் : எண்பத்து ஆறு |
கேள்வி-83 : கர்த்தருடைய தூதன் ஆகாரை சந்தித்த துரவின் பெயர் என்ன?
• லூஸ்
• பெத்தேல்
• ஏல்எல்லோகே
• லகாயிரோயீ
பதில் : லகாயிரோயீ |
கேள்வி-84 : திரளான ஜாதிகளுக்கு தகப்பன் யார்?
• ஆபிரகாம்
• ஈசாக்கு
• யாக்கோபு
• யோசேப்பு
பதில் : ஆபிரகாம் |
கேள்வி-85 : ஆபிரகாமின் சந்ததியில் யார் விருத்த சேதனம் பண்ண வேண்டும்?
• ஆண்கள்
• பெண்கள்
• ஆண், பெண் இருவரும்
• லேவியர்கள்
பதில் : ஆண்கள் |
கேள்வி-86 : கர்த்தர் ஆபிராமுக்கு வைத்த பெயர் என்ன?
• ஆதாம்
• ஆராம்
• ஆபிரகாம்
• ஆரான்
பதில் : ஆபிரகாம் |
கேள்வி-87 : ஆபிரகாமுக்கு சாராள் பெற்ற குமாரன் பெயர் என்ன?
• ஈசாக்கு
• இஸ்மவேல்
• யாக்கோபு
• லோத்து
பதில் : ஈசாக்கு |
கேள்வி-88 : கர்த்தர் சாராய்க்கு வைத்த பெயர் என்ன?
• சாரா
• இஸ்காள்
• சாராள்
• மில்க்காள்
பதில் : சாராள் |
கேள்வி-89 : பகலில் உஷ்ண வேலையில் கூடார வாசலில் உட்கார்ந்திருந்தது யார்?
• ஆபிரகாம்
• சாராள்
• எலியேசர்
• லோத்து
பதில் : ஆபிரகாம் |
கேள்வி-90 : ஆபிரகாமை பார்க்க வந்த புருஷர் எத்தனை பேர்?
• ஒன்று
• இரண்டு
• மூன்று
• நான்கு
பதில் : மூன்று |
கேள்வி-91 : ஆபிரகாம் சாராளிடம் எத்தனை படி மெல்லிய மாவு எடுத்து அப்பம் சுட சொன்னான்?
• ஒன்று
• இரண்டு
• மூன்று
• நான்கு
பதில் : மூன்று |
கேள்வி-92 : ஆபிரகாம் இளங்கன்றை யாரிடம் கொடுத்து சமைக்க சொன்னான்?
• சாராள்
• வேலைக்காரன்
• எலியேசர்
• லோத்து
பதில் : வேலைக்காரன் |
கேள்வி-93 : தன் உள்ளத்தில் நகைத்தது யார்?
• சாராள்
• ஆபிரகாம்
• லோத்து
• எலியேசர்
பதில் : சாராள் |
கேள்வி-94 : ஆபிரகாமை பார்க்க வந்த மூன்று புருஷர் பின்பு எங்கு சென்றார்கள்?
• கொமோரா
• எகிப்து
• சோதோம்
• பாபிலோன்
பதில் : சோதோம் |
கேள்வி-95 : கர்த்தர் நான் செய்யப்போகிறதை யாருக்கு மரைப்பேனோ என்றார்?
• ஈசாக்கு
• தூதர்
• ஆபிரகாம்
• லோத்து
பதில் : ஆபிரகாம் |
கேள்வி-96 : ஆபிரகாம் ஆண்டவரிடம் கடைசியாக எத்தனை நீதிமான்கள் இருந்தால் பட்டணத்தை அழிப்பீரோ என்றான்?
• பத்து
• முப்பது
• ஐம்பது
• எழுபது
பதில் : பத்து |
கேள்வி-97 : சோதோமின் வாசலில் உட்கார்ந்திருந்தது யார்?
• ஆபிரகாம்
• லோத்து
• அபிமெலேக்
• மெல்கிசெதேக்
பதில் : லோத்து |
கேள்வி-98 : லோத்தின் பிள்ளைகள் எத்தனை பேர்?
• ஒரு பெண்
• இரண்டு ஆண்கள்
• ஒரு ஆண், ஒரு பெண்
• இரண்டு பெண்கள்
பதில் : இரண்டு பெண்கள் |
கேள்வி-99 : பின்னிட்டு பார்த்து உப்புத்தூண் ஆனது யார்?
• லோத்து
• லோத்தின் பிள்ளைகள்
• லோத்தின் மனைவி
• லோத்தின் மருமகன்கள்
பதில் : லோத்தின் மனைவி |
கேள்வி-100 : சாராயின் நிமித்தம் கர்த்தர் யாருடைய வீட்டாரின் கர்ப்பத்தை அடைத்தார்?
• அம்ராப்
• சிநெயா
• அபிமெலேக்
• மெல்கிசேதேக்
பதில் : அபிமெலேக் |
கேள்வி-101: வேதாகமத்தில் முதல் தீர்க்கதரிசி யார்?
• நோவா
• ஆபிரகாம்
• ஏனோக்கு
• மோசே
பதில் : ஆபிரகாம் |
கேள்வி-102: ஈசாக்கு பிறந்த போது ஆபிரகாமின் வயது என்ன?
• நூறு
• எண்பத்து ஆறு
• தொண்ணூற்றொன்பது
• தொண்ணூறு
பதில் : நூறு |
கேள்வி-103 : பெயர்செபாவின் வனாந்தரத்தில் அழைந்து திரிந்தது யார்?
• சாராள்
• ஆகார்
• ஆபிரகாம்
• லோத்து
பதில் : ஆகார் |
கேள்வி-104: இஸ்மவேல் எந்த தேசத்து பெண்ணை விவாகம் பண்ணினான்?
• பாரான்
• கானான்
• மோரியா
• எகிப்து
பதில் : எகிப்து |
கேள்வி-105: ஆபிரகாம் அபிமெலேக்கிற்கு எத்தனை பெண் ஆட்டுக்குட்டிகளை கொடுத்தான்?
• ஐந்து
• ஏழு
• எட்டு
• பத்து
பதில் : ஏழு |
கேள்வி-106: ஆபிரகாம் தோப்பை உண்டாக்கிய இடம்?
• கானான்
• பாரான்
• பெயர்செபா
• மோரியா
பதில் : பெயர்செபா |
கேள்வி-107: தேவன் எந்த தேசத்தில் உள்ள மலையில் ஈசாக்கை பலியிட சொன்னார்?
• எகிப்து
• பெயர்செபா
• மோரியா
• கானான்
பதில் : மோரியா |
கேள்வி-108: ஈசாக்கை பலியிட ஆபிரகாம் எத்தனை வேலைக்காரரை கூட்டிச் சென்றான்?
• ஒன்று
• இரண்டு
• மூன்று
• நான்கு
பதில் : இரண்டு |
கேள்வி-109: ஆபிரகாம் ஈசாக்கை பலியிடும் படி போன இடத்திற்கு என்ன பேரிட்டான்?
• எல்ஷடாய்
• லகாய்ரோயீ
• யேகோவாயீரே
• ஏல்எல்லோகே
பதில் : யேகோவாயீரே |
கேள்வி-110: சாராள் எத்தனை வருஷம் உயிரோடிருந்தாள்?
• 127
• 152
• 175
• 192
பதில் : 127 |
கேள்வி-111: மக்பேலா நிலம் எந்த தேசத்தில் இருந்தது?
• மெசொப்பொத்தாமியா
• எகிப்து
• மோரியா
• கானான்
பதில் : கானான் |
கேள்வி-112: மெசொப்பொத்தாமியாவில் தண்ணீர் துரவண்டையில் நின்று கொண்டிருந்தது?
• நாகோர்
• பெத்துவேல்
• ஆபிரகாமின் ஊழியக்காரன்
• லாபான்
பதில் : ஆபிரகாமின் ஊழியக்காரன் |
கேள்வி-113: ஈசாக்கின் மனைவி பெயர் என்ன?
• ராகேல்
• மில்க்காள்
• ரெபேக்காள்
• ரேயுமாள்
பதில் : ரெபேக்காள் |
கேள்வி-114: ஏசா, யாக்கோபு பிறந்த போது ஈசாக்கின் வயது என்ன?
• நாற்பத்தி எட்டு
• ஐம்பத்து ஐந்து
• அறுபது
• எண்பத்தி ரெண்டு
பதில் : அறுபது |
கேள்வி-115: அபிமெலேக்கு பார்க்கையில் ஈசாக்கு யாரோடு விளையாடிக் கொண்டிருந்தான்?
• ஆபிரகாம்
• ரெபேக்காள்
• ஏசா
• யாக்கோபு
பதில் : ரெபேக்காள் |
கேள்வி-116: ஈசாக்கு விதை விதைத்து எத்தனை மடங்கு பலன் அடைந்தான்?
• பத்து
• இருநூறு
• நூறு
• ஆயிரம்
பதில் : நூறு |
கேள்வி-117: ஈசாக்கு சேபா என்று பெயர் வைத்த இடம் எப்படி அழைக்கப்பட்டது?
• ஏசேக்கு
• பெயர்செபா
• ரெகோபோத்
• கேரார்
பதில் : பெயர்செபா |
கேள்வி-118: ஏசா யாருடைய பெண்களை விவாகம் பண்ணினான்?
• ஏத்தியன்
• எமோரியன்
• பெலிஸ்தன்
• கானான்
பதில் : ஏத்தியன் |
கேள்வி-119: எனக்காக வேட்டையாடி சமைத்துக் கொண்டு வா என்று ஏசாவிடம் சொன்னது யார்?
• ஆபிரகாம்
• ஈசாக்கு
• ரெபேக்காள்
• யாக்கோபு
பதில் : ஈசாக்கு |
கேள்வி-120: ரெபேக்காள் ருசியுள்ள பதார்த்தம் செய்ய யாக்கோபிடம் என்ன கேட்டாள்?
• இரண்டு கடாரி
• இரண்டு செம்மறி ஆடு
• இரண்டு காட்டுப்புறா
• இரண்டு வெள்ளாட்டுக்குட்டி
பதில் : இரண்டு வெள்ளாட்டுக்குட்டி |
கேள்வி-121: ரோமம் மிகுந்தவன் யார்?
• ஏசா
• யாக்கோபு
• ஈசாக்கு
• இஸ்மவேல்
பதில் : ஏசா |
கேள்வி-122: ஏசாவின் சேஷ்ட புத்திர பாகத்தையும், ஆசீர்வாதத்தையும் எடுத்துக்கொண்டது யார்?
• ஈசாக்கு
• யாக்கோபு
• இஸ்மவேல்
• யோசேப்பு
பதில் : யாக்கோபு |
கேள்வி-123: பெத்துவேல் வசித்து வந்த இடம்?
• ஊர்
• பதான் ஆராம்
• கானான்
• எகிப்து
பதில் : பதான் ஆராம் |
கேள்வி-124: யாக்கோபின் சொப்பனத்தில் ஏணியில் ஏறி இறங்கியது யார்?
• தேவன்
• தேவ தூதர்கள்
• மனிதர்கள்
• பிசாசு
பதில் : தேவ தூதர்கள் |
கேள்வி-125: நான் உனக்கு சொன்னதை செய்யுமளவும் உன்னை __________ .
• மறப்பதில்லை
• விட்டுவிடுவதில்லை
• கைவிடுவதில்லை
• விலகுவதில்லை
பதில் : கைவிடுவதில்லை |
கேள்வி-126: யாக்கோபு எதை தூணாக நிறுத்தி அதற்கு எண்ணை வார்த்தான்?
• மரம்
• கல்
• சிலை
• தூண்
பதில் : கல் |
கேள்வி-127: யாக்கோபு சொப்பனம் கண்ட இடத்திற்கு என்ன பேரிட்டான்?
• லகாயீரோயி
• பெத்தேல்
• லூஸ்
• பெயர்செபா
பதில் : பெத்தேல் |
கேள்வி-128: யாக்கோபு பார்க்கையில் லாபானின் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தது யார்?
• ராகேல்
• சில்பாள்
• லேயாள்
• பில்காள்
பதில் : ராகேல் |
கேள்வி-129: கூச்சப்பார்வையுள்ளவள் யார்?
• ராகேல்
• சில்பாள்
• லேயாள்
• பில்காள்
பதில் : லேயாள் |
கேள்வி-130: பில்காளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தது யார்?
• லாபான்
• பெத்துவேல்
• ராகேல்
• லேயாள்
பதில் : ராகேல் |
கேள்வி-131: காத், ஆசேர் இவர்களின் தாய் பெயர் என்ன?
• ராகேல்
• லேயாள்
• பில்காள்
• சில்பாள்
பதில் : சில்பாள் |
கேள்வி-132: யாக்கோபுக்கு ஒரு குமாரத்தியைப் பெற்றது யார்?
• ராகேல்
• லேயாள்
• பில்காள்
• சில்பாள்
பதில் : லேயாள் |
கேள்வி-133: யாக்கோபு மற்றும் லாபானின் மந்தைக்கு இடையே இருந்த தூரம் எவ்வளவு?
• ஒரு நாள்
• இரண்டு நாள்
• மூன்று நாள்
• நான்கு நாள்
பதில் : மூன்று நாள் |
கேள்வி-134: யாக்கோபின் சம்பளத்தை லாபான் எத்தனை முறை மாற்றினான்?
• இரண்டு
• ஏழு
• பத்து
• பதினான்கு
பதில் : பத்து |
கேள்வி-135: தங்கள் தகப்பனால் அந்நியராய் என்னப்பட்ட குமாரத்திகள் யார்?
• ராகேல், லேயாள்
• சாராள், ரெபேக்காள்
• சில்பாள், பில்காள்
• லோத்தின் குமரத்திகள்
பதில் : ராகேல், லேயாள் |
கேள்வி-136: லாபான் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கையில் அவன் சுரூபங்களை திருடியது யார்?
• யாக்கோபு
• சில்பாள
• ராகேல்
• லேயாள்
பதில் : ராகேல் |
கேள்வி-137: யாக்கோபு லாபானிடத்தில் எத்தனை வருஷம் இருந்தான்?
• ஏழு
• பத்து
• பதினான்கு
• இருபது
பதில் : இருபது |
கேள்வி-138: யாக்கோபும் லாபானும் உடன்படிக்கை பண்ணின கல்லுக்கு லாபான் வைத்த பெயர் என்ன?
• பெத்தேல்
• ஜெர்சகதூதா
• கலயெத்
• மிஸ்பா
பதில் : ஜெர்சகதூதா |
கேள்வி-139: ஏசா வாழ்ந்து வந்த தேசம் எது?
• எகிப்து
• சேயீர்
• சீரியா
• கானான்
பதில் : சேயீர் |
கேள்வி-140: ஏசா யாக்கோபை பார்க்க எத்தனை பேரோடு வந்தான்?
• இருநூறு
• முந்நூறு
• நானூறு
• ஐநூறு
பதில் : நானூறு |
கேள்வி-141: நீ என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை போகவிடேன் என்றது யார்?
• ஆபிரகாம்
• ஈசாக்கு
• இஸ்மவேல்
• யாக்கோபு
பதில் : யாக்கோபு |
கேள்வி-142: உன் பேர் இனி யாக்கோபு எனப்படாமல் _______ எனப்படும்.
• இஸ்ரேல்
• இஸ்மவேல்
• இஸ்ரவேல்
• இமானுவேல்
பதில் : இஸ்ரவேல் |
கேள்வி-143: தேவனோடும் மனிதனோடும் போராடி மேற்கொண்டவன் யார்?
• ஈசாக்கு
• ஏசா
• யாக்கோபு
• லாபான்
பதில் : யாக்கோபு |
கேள்வி-144: யாக்கோபு தேவனை முகமுகமாய் கண்ட இடத்திற்கு என்ன பெயரிட்டான்?
• பெனியேல்
• மிஸ்பா
• மக்னாயீம்
• ஜெர்சகதூதா
பதில் : மக்னாயீம் |
கேள்வி-145: இஸ்ரவேல் புத்திரர் எந்த நரம்பை புசிக்கிறதில்லை?
• இடுப்பு நரம்பு
• தொடைச்சந்து நரம்பு
• குதிகால் நரம்பு
• கழுத்து நரம்பு
பதில் : தொடைச்சந்து நரம்பு |
கேள்வி-146: யாக்கோபு யாரை பார்த்து தேவனுடைய முகத்தை கண்டது போல் இருக்கிறது என்றான்?
• இஸ்மவேல்
• ஏசா
• லாபான்
• ஈசாக்கு
பதில் : ஏசா |
கேள்வி-147: சாலேம் என்னும் சீகேம் பட்டணம் எந்த தேசத்தில் இருந்தது?
• சேயீர
• சீரியா
• கானான்
• எகிப்து
பதில் : கானான் |
கேள்வி-148: யாக்கோபு ஏமோரின் புத்திரரிடத்தில் நிலத்தை எத்தனை வெள்ளிக்காசிற்கு வாங்கினான்?
• நூறு
• இருநூறு
• முந்நூறு
• நானூறு
பதில் : நூறு |
கேள்வி-149: தேசத்து பெண்களை பார்க்க போனது யார்?
• யாக்கோபு
• லேவி
• தீனாள்
• ரூபன்
பதில் : தீனாள் |
கேள்வி-150: யாருடைய மனம் தீனாளின் மேல் பற்றுதலாயிருந்தது?
• ஏமோர்
• சீகேம்
• யாக்கோபு
• லேயாள்
பதில் : சீகேம் |
கேள்வி-151: சீகேம் பட்டணத்து ஆண்களை விருத்தசேதனம் பண்ண சொன்னது யார்?
• யாக்கோபு
• ஏமோர்
• யாக்கோபின் குமாரர்
• சீகேம்
பதில் : யாக்கோபின் குமாரர் |
கேள்வி-152: அந்நிய தெய்வங்களையும், காதணிகளையும் யாக்கோபு எந்த மரத்தின் கீழ் புதைத்தான்?
• பேரிச்சை மரம்
• ஒலிவ மரம்
• கர்வாலி மரம்
• கொப்பேர் மரம்
பதில் : கர்வாலி மரம் |
கேள்வி-153: யாக்கோபு பெத்தேலில் பலிபீடம் கட்டி அதற்கு என்ன பெயர் வைத்தான்?
• லோன்பாகூத்
• மிஸ்பா
• எப்பிராத்தா
• ஏல்பெத்தேல்
பதில் : ஏல்பெத்தேல் |
கேள்வி-154: ரெபேக்காளின் தாதி பெயர் என்ன?
• லேயாள்
• தெபொராள்
• ராகேல்
• சில்பாள்
பதில் : தெபொராள் |
கேள்வி-155: ராகேலின் இரண்டாவது மகனுக்கு யாக்கோபு வைத்த பெயர் என்ன?
• பெனொனி
• சிமியோன்
• யோசேப்பு
• பென்யமீன்
பதில் : பென்யமீன் |
கேள்வி-156: பெத்தேலுக்கு சமீபமாயிருந்த கர்வாலி மரத்தின் கீழ் அடக்கம் பண்ணப்பட்டது யார்?
• ராகேல்
• ரெபேக்காள்
• தெபொராள்
• லேயாள்
பதில் : தெபொராள் |
கேள்வி-157: யாக்கோபின் மறுமனையாட்டி பில்காளோடு சயனித்தது யார்?
• பென்யமீன்
• யூதா
• சிமியோன்
• ரூபன்
பதில் : ரூபன் |
கேள்வி-158: யாக்கோபின் குமாரர் மொத்தம் எத்தனை பேர்?
• ஏழு
• பத்து
• பதினொன்று
• பனிரெண்டு
பதில் : பனிரெண்டு |
கேள்வி-159: ஈசாக்கின் ஆயுசு நாட்கள் எத்தனை வருஷம்?
• நூற்றிஐந்து
• நூற்றைம்பது
• நூற்றெண்பது
• இருநூறு
பதில் : நூற்றெண்பது |
கேள்வி-160: யூதா தன் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்க எங்கு போனான்?
• அதுல்லாம்
• கெசீப்
• எகிப்து
• திம்னா
பதில் : திம்னா |
கேள்வி-161: தாமார் அடையாளமாக முத்திரை மோதிரம், ஆரம், கைக்கோல் ஆகியவற்றை யாரிடம் கேட்டாள்?
• ரூபன்
• யூதா
• ஓனான்
• சேலா
பதில் : யூதா |
கேள்வி-162 : போத்திபார் யோசேப்பை யாரிடத்தில் விளைக்கு வாங்கினான்?
• எகிப்தியர்கள்
• ஏதோமியர்
• இஸ்மவேலர்
• கானானியர்
பதில் : இஸ்மவேலர் |
கேள்வி-163 : கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் _______ .
• ஞானமுள்ளவனானான்
• யுத்தவீரனானான்
• காரியசித்தியுள்ளவனானான்
• பராக்கிரமசாலியானான்
பதில் : காரியசித்தியுள்ளவனானான் |
கேள்வி-164 : கர்த்தர் யோசேப்புக்கு சிறைச்சாலையில் யாருடைய தயவு கிடைக்கும்படி செய்தார்?
• பானபாத்திரக்காரன்
• கைதிகள்
• சிறைச்சாலை தலைவன்
• வேலையாட்கள்
பதில் : சிறைச்சாலை தலைவன் |
கேள்வி-165 : ஒரே இராத்திரியில் வெவ்வேறு பொருள் கொண்ட சொப்பனம் கண்ட இருவர் யார்?
• பார்வோன், போத்திபார்
• பார்வோன், சுயம்பாகிகளின் தலைவன்
• பானபாத்திரக்காரரின் தலைவன், சுயம்பாகிகளின் தலைவன்
• போத்திபார், பானபாத்திரக்காரரின் தலைவன்
பதில் : பானபாத்திரக்காரரின் தலைவன், சுயம்பாகிகளின் தலைவன் |
கேள்வி-166 : பானபாத்திரக்காரரின் தலைவன் யாரை மறந்துவிட்டான்?
• பார்வோன
• யோசேப்பு
• சுயம்பாகிகளின் தலைவன்
• போத்திபார்
பதில் : யோசேப்பு |
கேள்வி-167 : பார்வோன் கண்ட சொப்பனத்தில் அழகும் புஷ்டியுமான பசுக்கள் எத்தனை இருந்தது
• ஐந்து
• ஏழு
• பனிரெண்டு
• பதினாலு
பதில் : ஏழு |
கேள்வி-168 : பார்வோனின் சொப்பனத்தில் சாவியானதும் கீழ் காற்றினால் தீய்ந்து போதுமான கதிர்கள் எத்தனை முளைத்தது?
• ஐந்து
• ஏழு
• பனிரெண்டு
• பதினாலு
பதில் : ஏழு |
கேள்வி-169 : பார்வோன் யோசேப்பிற்கு வைத்த பெயர் என்ன?
• சாத்ரா
• ஆனாகு
• போத்திபிரா
• சாப்நாத்பன்னேயா
பதில் : சாப்நாத்பன்னேயா |
கேள்வி-170 : யோசேப்பு பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது அவனது வயது என்ன?
• பதினேழு
• இருபது
• முப்பது
• நாற்பது
பதில் : முப்பது |
கேள்வி-171 : யோசேப்பின் மனைவி பெயர் என்ன?
• ஆஸ்நாத்
• சூவா
• தாமார்
• தெபொராள்
பதில் : ஆஸ்நாத் |
கேள்வி-172 : எகிப்திலே தானியம் உண்டென்று கேள்விப்பட்டது யார்?
• யோசேப்பு
• யாக்கோபு
• இஸ்மவேலர்
• ஏதோமியர்
பதில் : யாக்கோபு |
கேள்வி-173 : யோசேப்பு தன் சகோதரரை எத்தனை நாள் காவலில் வைத்தான்?
• இரண்டு
• மூன்று
• நான்கு
• ஐந்து
பதில் : மூன்று |
கேள்வி-174 : யோசேப்பு பென்யமீனை கூட்டிக்கொண்டு வரும்வரை யாரை பிடித்து கட்டுவித்தான்?
• லேவி
• யூதா
• சிமியோன்
• ரூபன்
பதில் : சிமியோன் |
கேள்வி-175 : நீங்கள் என் நரைமயிரை சஞ்சலத்தோடே பாதாளத்தில் இரங்கப்பண்ணுவீர்கள் என்றது யார்?
• யோசேப்பு
• பார்வோன்
• யாக்கோபு
• போத்திபார்
பதில் : யாக்கோபு |
கேள்வி-176 : இஸ்ரவேல் எதை இரட்டிப்பாய் கொண்டு போகச் சொன்னான்?
• தைலம்
• பணம்
• கழுதை
• வாற்கோதுமை
பதில் : பணம் |
கேள்வி-177 : சாக்குகளில் பணம் கைப்பிசகாய் வந்திருக்கும் என்றது யார்?
• பென்யமீன்
• யூதா
• ரூபன்
• இஸ்ரவேல்
பதில் : இஸ்ரவேல் |
கேள்வி-178 : “மகனே, தேவன் உனக்கு கிருபை செய்யக்கடவர்” – இந்த வார்த்தை யார் யாரிடம் சொன்னது?
• யோசேப்பு – பென்யமீன்
• பார்வோன் – யோசேப்பு
• இஸ்ரவேல் – யோசேப்பு
• போத்திபார் – யோசேப்பு
பதில் : யோசேப்பு – பென்யமீன் |
கேள்வி-179 : யோசேப்பு யாருடைய சாக்கில் வெள்ளி பாத்திரத்தை வைக்கச் சொன்னான்?
• யூதா
• ரூபன்
• பென்யமீன்
• சிமியோன்
பதில் : பென்யமீன் |
கேள்வி-180 : எகிப்தியர் யாரோடு சாப்பிடுவதை அருவருப்பாக எண்ணினர்?
• ஏதோமியர்
• எபிரெயர்
• இஸ்மவேலர்
• கானானியர்
பதில் : எபிரெயர் |
கேள்வி-181 : யோசேப்பு தன் சகோதரரோடு சாப்பிடுகையில் யாருடைய பங்கு ஐந்து மடங்கு அதிகமாயிருந்தது?
• ரூபன்
• யோசேப்பு
• பென்யமீன்
• சிமியோன்
பதில் : பென்யமீன் |
கேள்வி-182 : எகிப்திலே யூதா யோசேப்பை எப்படி அழைத்தான்?
• சகோதரனே
• ஆண்டவர்
• பார்வோன்
• எஜமான்
பதில் : ஆண்டவர் |
கேள்வி-183 : யார் சத்தமிட்டு அழுததை எகிப்தியரும் பார்வோன் வீட்டாரும் கேட்டார்கள்?
• போத்திபார்
• பார்வோன்
• இஸ்ரவேல்
• யோசேப்பு
பதில் : யோசேப்பு |
கேள்வி-184 : தேவன் யோசேப்பை எகிப்து தேசம் முழுதுக்கும் ________ வைத்தார்.
• வேலைக்காரனாக
• தகப்பனாக
• அதிபதியாக
• கர்த்தனாக
பதில் : அதிபதியாக |
கேள்வி-185 : யோசேப்பு தன் சகோதரரை எந்த நாட்டில் தங்க வைப்பேன் என்றான்?
• எகிப்து
• கோசேன்
• கானான்
• ஏதோம்
பதில் : கோசேன் |
கேள்வி-186 : எகிப்துக்கு போகும் முன் யாக்கோபு ஈசாக்கின் தேவனுக்கு பலியிட்ட இடத்தின் பெயர் என்ன?
• ஏல் பெத்தேல்
• கானான்
• பெயெர்செபா
• பதான் ஆராம்
பதில் : பெயெர்செபா |
கேள்வி-187 : சிமியோனுடைய மனைவி கானானிய ஸ்திரியின் குமாரன் பெயர் என்ன?
• நோவா
• யோபு
• நாகமான்
• சவுல்
பதில் : சவுல் |
கேள்வி-188 : யூதாவின் குமாரரில் எத்தனை பேர் கானான் தேசத்தில் இறந்துபோனார்கள்?
• ஒன்று
• இரண்டு
• மூன்று
• நான்கு
பதில் : இரண்டு |
கேள்வி-189 : யோபுவின் தகப்பன் பெயர் என்ன?
• ரூபன்
• செபுலோன்
• யூதா
• இசக்கார்
பதில் : இசக்கார் |
கேள்வி-190 : எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் மொத்தம் எத்தனை பேர்?
• நாற்பத்தி ஐந்து
• அறுபத்தாறு
• எழுபது
• எழுபத்தி இரண்டு
பதில் : எழுபது |
கேள்வி-191 : பார்வோன் யோசேப்பின் சகோதரரிடம் என்ன கேட்டான்?
• நீங்கள் யார்?
• உங்கள் தெய்வம் யார் ?
• உங்கள் தொழில் என்ன?
• உங்கள் வயது என்ன?
பதில் : உங்கள் தொழில் என்ன? |
கேள்வி-192 : யாக்கோபு பரதேசியாய் சஞ்சரித்த நாட்கள் எத்தனை வருஷம்?
• நூற்று முப்பது
• நூற்று அறுபத்தி ஐந்து
• நூற்று எழுபத்து ஏழு
• நூற்று என்பது
பதில் : நூற்று முப்பது |
கேள்வி-193 : எகிப்தியரில் யார் தங்கள் நிலத்தை விற்காதிருந்தார்கள்?
• இஸ்ரவேலர்கள்
• ஆசாரியர்கள்
• போர்ச்சேவகர்கள்
• மந்திரவாதிகள்
பதில் : ஆசாரியர்கள் |
கேள்வி-194 : யாக்கோபு எகிப்து தேசத்தில் எத்தனை வருஷம் இருந்தான்?
• பதினைந்து
• பதினேழு
• இருபது
• இருபத்து ஆறு
பதில் : பதினேழு |
கேள்வி-195 : யாக்கோபின் ஆயுசு நாட்கள் எத்தனை வருஷம்?
• நூற்று முப்பது
• நூற்று நாற்பத்து ஏழு
• நூற்று அறுபத்தி ஐந்து
• நூற்று எழுபத்து ஏழு
பதில் : நூற்று நாற்பத்து ஏழு |
கேள்வி-196 : எப்பிராயீம், மனாசேயை இஸ்ரவேல் யாருக்கு ஒப்பிட்டான்?
• ரூபன், லேவி
• லேவி, சிமியோன்
• யோசேப்பு, பென்யமீன்
• ரூபன், சிமியோன்
பதில் : ரூபன், சிமியோன் |
கேள்வி-197 : இஸ்ரவேல் யோசேப்பின் குமாரரை ஆசீர்வதிக்கையில் தன் வலதுகையை யார்மேல் வைத்தான்?
• பென்யமீன்
• மனாசே
• எப்பிராயீம்
• யோசேப்பு
பதில் : எப்பிராயீம் |
கேள்வி-198 : யாக்கோபின் சேஷ்ட புத்திரன் யார்?
• யோசேப்பு
• லேவி
• சிமியோன்
• ரூபன்
பதில் : ரூபன் |
கேள்வி-199 : கடற்கரை அருகே குடியிருந்து, கப்பல் துறைமுகமாய் இருப்பது யார்?
• சிமியோன்
• நப்தலி
• செபுலோன்
• இசக்கார்
பதில் : செபுலோன் |
கேள்வி-200 : இன்பமான வசனங்களை வசனிப்பது யார்?
• இசக்கார்
• லேவி
• நப்தலி
• யூதா
பதில் : நப்தலி |
கேள்வி-201 : பீறுகிற ஓநாய் யார்?
• செபுலோன்
• யூதா
• பென்யமீன்
• சிமியோன்
பதில் : பென்யமீன் |
கேள்வி-202 : எகிப்தியர் இஸ்ரவேலுக்காக எத்தனை நாள் துக்கம் கொண்டாடினார்கள்?
• மூன்று
• ஏழு
• நாற்பது
• எழுபது
பதில் : எழுபது |
கேள்வி-203 : யோசேப்பு உயிரோடிருந்த நாட்கள் எத்தனை வருஷம்?
• தொண்ணூறு
• நூற்றுப்பத்து
• நூற்று அறுபத்தி ஐந்து
• நூற்று என்பது
பதில் : நூற்றுப்பத்து |
கேள்வி-204 : என் எழும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்று இஸ்ரவேல் புத்திரரிடம் சொன்னது யார்?
• ஈசாக்கு
• மோசே
• இஸ்ரவேல்
• யோசேப்பு
பதில் : யோசேப்பு |
Download ஆதியாகமம் வேத வினா விடை கேள்விகள் PDF Here
Similar Searches:
genesis tamil bible quiz, bible quiz genesis 1-50 with answers pdf in tamil, genesis bible quiz questions and answers in tamil, tamil bible quiz genesis 1-50, genesis quiz in tamil, bible quiz genesis 1-50 with answers in tamil, genesis tamil bible, bible quiz in tamil genesis, bible genesis tamil, bible quiz tamil bible games with answers, genesis bible quiz in tamil, genesis quiz questions and answers pdf in tamil, genesis 5 tamil, genesis 6 tamil
Test Your Bible Knowledge Quiz [ஆதியாகமம்]
Thankyou its very useful 🙏😊👍
Thank You Sir. God Bless You.
Praise The Lord. கேள்வி எண் 149 பதில் தீனாள்.